"ஜீனத் வாரிஸ் ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா"
கடந்த ஞாயிற்றுக்கிழமை 20.7.2025 அனறு ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கல் அருகில் உள்ள மறவாய்க்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக :
1. மௌலானா, மௌலவி ஹனிபா மன்பஈ (JIH- தமிழ்நாடு & புதுச்சேரி மாநில தலைவர்)
2. மௌலவி, முஹையிதீன் குட்டி உமரி (JIH- தமிழ்நாடு மாநில செயலாளர் )
3. ஜனாப் ; நசீர் அத்தாவுல்லாஹ் (JIH-சென்னை மெட்ரோ நாஜிம்)
4. ஜீனத் வாரிசுதாரர்கள் அகமது அலி சாகிப் மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் (பள்ளிவாசல் வக்பு செய்தவர்கள்)
5. ஜனாப்; துஃபைல் அஹமத் (இஸ்லாமிக் சென்டர் வேலூர் பொதுச்செயலாளர்)
6. ஜனாப்; நஜீர் ஹுஸைன் (இஸ்லாமிக் சென்டர் மதுரை துணைச் செயலாளர் & JIH-மண்டல அமைப்பாளர்)
7. மௌலவி அலி பாதுஷா மன்பஈ ஃபாஜில் ரஷாதி (தலைமை இமாம் தேரிருவேலி)
8. மௌலவி சிக்கந்தர் காஸிமி (செயலாளர் கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை)
ஆகியவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்கள்.
* இந்நிகழ்விற்கு மறவாய்க்குடி ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
* கிராத்: தலைமை இமாம் மௌலவி ஜாஃபர் சாதிக் மன்பஈ -இராமநாதபுரம் தீன் நகர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிகழ்ச்சியில் துவக்கமாக இறைமறை வசனம் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.
* வரவேற்புரை; மௌலவி முஹம்மது ரபீக் - JIH-உறுப்பினரும் சிக்கல் மதினா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வரவேற்புரையை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலை உலக முஸ்லிம்களுக்கு வக்ஃபு செய்யும் நிகழ்வு திறப்பு விழா உடன் நடைபெற்றது.
திறப்பு விழா;
ஜீனத் வாரிசுதாரர்களான
ஜனாப்: அஹமது அலி மற்றும் அவர்களின் சகோதரர்கள்
வக்ஃபு செய்தார்கள்.
சிறப்புரை;
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மட்டும் புதுச்சேரி JIH- தலைவர்
மௌலவி, மௌலானா முஹம்மது ஹனிபா மன்பஈ அவர்கள் பள்ளிவாசல் திறப்பு விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் நிகழ்வு!
* மறவாய்க்குடி உள்ளூர் சகோதர சமுதாய சொந்தங்கள் ஊர் தலைவர்கள் மேடையில் அமர்ந்து நிகழ்ச்சியை கௌரவித்தனர்.
* உள்ளூர் சகோதர சமுதாய மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மறவாய்க்குடியை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் சுற்று வட்டார ஜமாஅத்தை சார்ந்த
* மதீனா நகர்
* வல்லக்குளம்
* பனிவாசல்
* சிக்கல்
* தொட்டிய பட்டி
* புத்தேந்தல்
* தத்தங்க்குடி
* ஓடைக்குளம்
* கோட்டை யேந்தல்
* கீழச்செல்வனூர்
* வாலி நோக்கம்
* சாயல்குடி
* ஒப்பிலான்
* தேரிருவேலி
* பூசேரி
* அணிகுருந்தன்
* முஹமதியாபுரம்
* மக்கா நகர்
* ரமலான் நகர்
* தீன் நகர்
* வன்னி வயல்
* பால்கரை
* P.S.A நகர் நத்தம்
* மேலமடை
* தேவிபட்டினம்
* குராயூர்
* காண்டை
* சொக்க நாதன் பட்டி
* அணைக்கரைப்பட்டி
* ஊராம்பட்டி
* கோடாங்கி பட்டி
* கோட்டூர்
மற்றும்,
விருதுநகர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள்.
மேலும், இராமநாதபுரம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள்.
கௌரவிப்பு ;
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள்
* JIH-மாநிலத் தலைவர்
* JIH- சென்னை மெட்ரோ நாஜிம்
* ஜீனத் வாரிசு தாரர்கள்
* சிறப்பு அழைப்பார்கள்
* உள்ளூர் சகோதர சமுதாய தலைவர்கள்
அண்டை கிராமத்தில் இருந்து வந்தவர்கள் ,
பிற ஊர்களில் இருந்து வந்தவர்கள்,
பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்;
* முக்கியஸ்தர்களுக்கு
* இமாம்கள் மற்றும் அந்தந்த ஜமாஅத் தலைவர்கள்
* கிராம நிர்வாகிகள்
* அரசு நிர்வாகிகள்
* பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்
* உள்ளூர் தலைமை ஆசிரியர்
* ஆசிரியர்கள்
என கிட்டத்தட்ட 120 க்கு மேலான சிறப்பு விருந்தினர்களை முக்கியஸ்தர்களை விருந்தாளிகளை
பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அன்பளிப்பு ;
அண்டை ஜமாஅத்தார்கள் திரளாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து துஆ செய்ததோடு மட்டுமன்றி
அன்பளிப்பு செய்தார்கள்
* பீரோ
* மிக்சி
* டேபிள்
இதுபோன்று அந்தந்த ஜமாஅத்தின் நினைவாக அன்பளிப்பு செய்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள்.
விருந்து உபசரிப்பு:
புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த அத்தனை மக்களுக்கும் சுமார் 1000 நபர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்து உபசரிப்பு நடைபெற்றது.
புதிய பள்ளிவாசல் திறப்பு விழா துஆவுடன் இனிதே நிறைவடைந்தன.